Skip to main content

பேருந்து பயணம்

பயணம் - ஒவ்வொரு மனிதனுக்கும் பிடித்த ஒரு செயல்.

சாலை வழி பயணம் / சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். நம் அன்றாட வாழ்வில் இருந்து ஒரு இடைவேளை எடுத்து இவ்வாறு செல்லும் பயணம் மகிழ்ச்சியாக அமைய ஏராளமான திட்டமிடுகிறோம்.

இவ்வாறான பயணத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது பொது போக்குவரத்து. சாதாரண உள்ளூர் பேருந்து தொடங்கி ஆடம்பரமான சொகுசு பேருந்துகள் வரை ஏதேனும் ஒன்றில் நாம் பயணிக்கிறோம். அவ்வாறான ஒரு பேருந்து பயணத்தை பற்றி தான் இப்பதிவு.

கோவையில் இருந்து மூணார் செல்லும் புதிய அரசு பேருந்து அது. 7 மணி நேரப் பயணம். அனுபவம் மிகுந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர். சுமார் நான்கைந்து வருடங்களாக இருவரும் ஒரே தடத்தில் பணி புரிகின்றனர். உடன் பிறந்த சகோதரர்களையும் மிஞ்சும் வகையில் ஒருவர் மீது ஒருவருக்கு பாசம்.

தாங்கள் இருவரும் மக்களுக்கு நேரடியாக தங்கள் சேவைகளை வழங்குவதாக எண்ணுகிறார்கள். இருவரும் தன் அலைபேசியை ஓட்டுநர் அருகில் உள்ள பெட்டியில் போட்டுக் கொள்கிறார்கள். பயணத்தின் போது அலைபேசியை பயன்படுத்துவதில்லை. பொது போக்குவரத்து என்பதை உணர்ந்து அவர்கள், பேருந்தில் குப்பைகள் இட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார்கள்.

அருமையாக பேருந்தை இயக்கும் ஓட்டுநர். தேவை இல்லாமல் ஒலி எழுப்புவதில்லை. வேகமாக சென்றாலும் தாறுமாறாக இயங்குவதில்லை. பேருந்து நிலையத்திற்கு குறித்த நேரத்தையும் விட 5 நிமிடங்கள் முன்னதாகவே வந்து விடுகிறார்கள்.

அனைவரிடமும் அன்பாக பழகும் நடத்துநர்க்கு கனிவாக பேசும் குணம். புதிதாக வரும் சுற்றுலா பயணிகளுக்கு, பேருந்து கடந்து செல்லும் ஒவ்வொரு ஊரின் பெருமையை கூறும் குணம்.

சில்லறைக்காக தரக்குறைவாக பேசும் நடத்துநர்கள் மத்தியில் ஓர் நல்ல மனிதரையும், போட்டிக்காக தாறுமாறாக விபத்து ஏற்படும் வகையில் பேருந்தை இயக்கும் ஓட்டுநர்கள் மத்தியில் ஓர் நல்ல மனிதரையும் சந்தித்து அவர்களுடன் பயணித்தது மனநிறைவாக இருந்தது.

சமீபத்திய சம்பவம் (பேருந்தை தரக்குறைவாக இயக்கிய ஓட்டுநரை கேள்வி கேட்ட பயணியை தாக்கிய சம்பவம்) இவர்களின் நினைவலைகளை கிளறியது. இவ்வாறான நல்ல மனிதர்கள் நல்ல நினைவலைகளை நமக்கு விட்டுச் செல்கிறார்கள்.

நன்றி

Comments

Post a Comment

Please do share your suggestions and feedback.

Popular posts from this blog

LOTUS Temple Coimbatore

Nice to meet you all again through my blog ( Perceptions ). This article is about one of my short Evening visit to the Light of Truth Universal Shrine (LOTUS) Temple   which is located at Chettipalayam , Coimbatore. It is a unique temple in the Kongu region dedicated to the Light of all faiths and world peace. LOTUS is always one of the special Flower. LOTUS is considered as flower of Purity. It represents the purity of Heart and Mind, Long Life, Health and good Fortune. This could be a reason for the structure of the temple. This is the birthplace of Sri Swami Satchidananda, who preached that “ Truth Is One; Paths Are Many ”. As he realized, there is no deity in this temple instead there are 12 light rays representing 12 major religions across the world.

The Hidden Treasure - Dzogchen Monastery #TravelDiary

Hello Readers! Vanakkam. Nice to meet you all again, through my blog Perceptions . Through this blog, I share some insights and experiences about Travel, venues and Reviews about services. Today I am planning to share yet another Travel Diary. I hope you will enjoy it. To quickly see my other articles, click here . I'm delighted to share this article regarding my visit to Dzogchen Monastery (One of the active Tibetian settlements in India). I was fortunate enough to visit this place on the birthday of Siddhartha Gautama Buddha (8th April). Buddhist Monastery Dzochen Monastery One day, when I was hunting for a new place to visit, I came across the Dzogchen Monastery. The location seemed to be perfect for a one-day trip. I started to surf and gather more information regarding the venue. All these days, I had a thinking that only Northern part of the Nation had Buddhist Monastery. But, I was surprised to find one next to my place. Some of the famous Monasteries in Southern part: Namd...

History of Vande Mataram

Bonjour In 1870s, Bankim Chandra Chattopadhyay had written a poem for his novel Anandamath . The Novel was published during 1882. It was one of the leading selling Novel during that period in Bengal state. The poem was completely a religious based song that was penned to praise Mother Durga and it had more than 10 verses (stanza). " Vande Mataram " means " I Bow to Thee Mother " In 1896, Rabindra Nath Tagore used the first two verses of that poem in the Bengal Independent movement rally. He was treating the Mother Nation as equal to a Goddess. Thus the meaning of " Vande Mataram " was understood as "I Bow to Thee Motherland" instead of "I Bow to Thee Mother". " Vande Mataram " soon gained an identity among all freedom movements that was taking place in India during that time. It became an important lynchpin in the history of Indian freedom struggle. Most regional language poet's started to translate Vande Mat...